அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது என்றும் எங்கள் தரப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் எனவும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இறுதியில் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 20-ம் தேதி […]
மாவீரர் பகத்சிங் 92வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாவீரர் பகத்சிங் ரத்ததானம் கழக கழக அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பகத்சிங்கின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இம் முகாமில் கருத்துரிமை கூட்டமைப்பு […]
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உள்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி கூறினார். இது தொடர்பாக அவர் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் […]
.அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் உடனடியாக மேல்முறையீடு செய்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மட்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரது மேல்முறையீட்டு […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டியை சேர்ந்த தமிழேந்திரன் சர்க்கார் (வயது 34) என்பவர் திண்டுக்கல் அரசு கேபிள் பிரிவில் உதவி தொழில்நுட்பாளராக இருந்தார், இவர் இன்று காலை பள்ளிக்கூட ஆசிரியையான மனைவி அஜித்தா(28) மகள் ஜியா (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி சென்றார். பொட்டி செட்டிபட்டி பிரிவு அருகே பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இடித்து, 1 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து தமிழேந்திரன் சர்க்கார் பலியானார். […]
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24-ந் தேதி காலமானர். அஜித் தந்தையின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினர். = இந்த நிலையில், தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது மேலும், அ.தி.மு.க .பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் அனுமதி அளித்தது. தீர்ப்பு வெளியான உடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், எடப்பாடி […]
சென்னை மெரினாவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டிவருமாறு :- கழகம் சட்ட திட்ட விதிகளின்படி சரியான பாதையில் செல்கின்ற காரணத்தினால் ஒரு சிறப்பான,ஒரு நல்ல தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்பது கழக தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் கிடைத்துள்ளது.இதன் மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வருவதற்கு எந்த தடையும் இல்லை.அவர்கள் மேல் முறையீடு தொடர்பாக எங்களின் சட்டக்குழு அதனை எதிர்கொள்ளும்.இந்த தீர்ப்பு என்பது மகத்தான,வரவேற்கத் தகுந்த தீர்ப்பு.ஒவ்வொரு […]
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்டவழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.அதன்படி ஓ. பன்னீர்செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம். அ.தி.மு.க.-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் […]
ஆக்கி இந்தியாவின் 18 வயதுக்குட்பட்டோருக்கான கிராஸ் ரூட் தென் மண்டல அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி ராமநாதபுரம் வேலுமாணிக்கம் செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் மார்ச் 19 முதல் 26 வரை நடைபெற்றது இதில் கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா புதுச்சேரி மற்றும் தமிழக அணிகள் கலந்து கொண்டு விளையாடின. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன இறுதிப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழகமும் கர்நாடகமும் விளையாட தகுதி பெற்றன […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
