சாலை விபத்து: மனைவி கண்முன்னே கணவன் பரிதாப சாவு
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டியை சேர்ந்த தமிழேந்திரன் சர்க்கார் (வயது 34) என்பவர் திண்டுக்கல் அரசு கேபிள் பிரிவில் உதவி தொழில்நுட்பாளராக இருந்தார்,
இவர் இன்று காலை பள்ளிக்கூட ஆசிரியையான மனைவி அஜித்தா(28) மகள் ஜியா (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி சென்றார்.
பொட்டி செட்டிபட்டி பிரிவு அருகே பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இடித்து, 1 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து தமிழேந்திரன் சர்க்கார் பலியானார்.
மனைவி அஜித்தா மகள் ஜியா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர் அவர்கள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து கொடைரோடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.