• June 6, 2025

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை இல்லா வாகன காப்பகம்

 தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை இல்லா வாகன காப்பகம்

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே மாநகராட்சி நிர்வாகத்தினால் நடத்தப்படுத்தப்படும் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த வாகன காப்பகத்தில் நாள் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டும், எடுக்கப்பட்டும் வருகிறது.
மேற்படி வாகன நிறுத்த காப்பகத்தில் ஒரு வாகனத்துக்கு ரூ 5 வசூல் செய்யப்படுகிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவுடன் காப்பகத்தில் ஒரு பகுதியில் மட்டுமே மேற்கூரை அமைத்தது. அந்த மேற்கூரை அமைந்த பகுதியில் சுமார் 200 வாகனங்கள் மட்டுமே நிறுத்தக்கூடிய அளவிற்கு வசதி உள்ளது.
மற்ற வாகனங்கள் வெயிலிலும் மழையிலுமே விடக்கூடிய சூழல் இருந்து வருகிறது. மேலும் வாகனம் நிறுத்தும் இடத்திலும் சிறு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகிறது.
இதனால் வாகனங்களை நிறுத்துவோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே மாநகர மேயர் இதில் கவனம் செலுத்த வேண்டு. புதிய பஸ் நிலைய வாகன காப்பகத்தில் மழைநீர் தேங்காத வகையில் பேவர்பிளாக் தளம் அமைத்தும், வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் நனையாமல் மேற்கூரை அமைக்க வேண்டும் என்று மக்கள் மேம்பாட்டுகழக மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் சுப.மாடசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *