கோவில்பட்டி எட்டயபுரம் சாலையை ஆக்கிரமித்த மணல் திட்டுகள் அகற்றம்

கோவில்பட்டி நகரில் உள்ள சாலைகளின் இருபுறமும் கடைகளில் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு ஒருபுறம்… மறுபுறம் மழைக்கு அரித்து கொண்டுவரப்படும் மணல் திட்டுகள் அகற்றப்படாமல் விபத்துக்கு வழிவகுக்கும்.
நெடுஞ்சாலை பணியாளர்கள் இதையெல்லாம் தினமும் சரி செய்தால் சாலை அழகுறும். இரு சக்கர வாகன ஓட்டிகள் பயமின்றி சாலைகளில் பயணம் செய்யமுடியும்.
அது போல் செய்யாத காரணத்தினால் நகரில் பல இடங்களில் சாலைகளில் மணல் திட்டுகள் உருவாகி பெரும் பகுதியை ஆக்கிரமித்து உள்ளன. ரெயில் நிலையம் எதிர்புற சாலை, ஆர்.சி.சர்ச் அருகே, மெயின்ரோடு முழுவதும் இந்த மணல் திட்டுகளை காணமுடியும்.
இதே போல் எட்டயபுரம் ரோட்டில் மணல் திட்டுகள் அதிகம் காணப்பட்டன.
முதல் அமைச்சர் ஸ்டாலின் நாளை கோவில்பட்டி வருகையை முன்னிட்டு அவசரகால பணியாக இன்று எட்டயபுரம் ரோட்டில் திட்டங்குளம் சாலையின் இருபுறத்திலும் மணல்திட்டுகள் அகற்றும் பணி நடைபெற்றது.
பொறியாளர் காளிராஜ் மேற்பார்வையில் இந்த பணி வேகமாக நடந்தது. ஜே,சி.பி, இயந்திரம் மூலம் மணல் திட்டுகள் அகற்றப்பட்டன, மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன,
பொறியாளர் காளிராஜ் கூறுகையில், “அடுத்ததாக நகரில் சாலைகளில் உள்ள மணல் திட்டுகள் அகற்றும் பணி நடைபெறும்” என்று தெரிவித்தார்.
