தூத்துக்குடி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகலில் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார்.
விமான நிலையத்தில் ,மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகைகுளம் விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், மனோ தங்கராஜ், சாத்தூர் ராமச்சந்திரன், கண்ணப்பன், டி.ஆர்.பாலு எம்.பி., மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மற்றும் அதிகாரிகள் ஸ்டாலினை வரவேற்றனர்.
விமான நிலைய வாசலில் கட்சி தொண்டர்கள் குவிந்து இருந்தநற். அவர்கள் வ்ரவேற்பை பெற்றுக்கொண்ட ஸ்டாலினுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து காரில் கிளம்பி சென்றார். ஸ்டாலின் வருகையை யொட்டி விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
