தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகள்; போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே ஞானியர் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி (வயது 63). இவரது மகள் அமுதா (35). இவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில் ஆறுமுகபாண்டி, மகள் அமுதாவின் 5 பவுன் நகையை அடகு வைத்து அந்த பணத்தில் சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரம் கிராமத்தில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். தந்தையும் மகளும் அங்கேயே தங்கி தோட்ட வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 3ம் தேதிய, அடகு வைத்த நகையை திருப்ப வேண்டும் என்று அமுதா கூறியதால் தந்தை மகளிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அமுதா தந்தையின் தலையில் அரிவாளால் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகபாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆறுமுக பாண்டி இறந்து போனார். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இனஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து அமுதாவை கைது செய்தார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த் கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
