• June 8, 2025

50 சதவீத மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகள்

 50 சதவீத மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் பாரம்பரிய நெல்ரக விதைகள் விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பாரம்பரிய நெல் ரகம் தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆத்தூர் கிச்சடிசம்பா, கீரைசம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார் ஆகிய பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு 50 சதவீதம் மானியவிலையில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 2 ஆயிரம் கிலோ விநியோகம் செய்யப்பட உள்ளது.
ஆழ்வார்திருநகரி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்; சாத்தான்குளம், தூத்துக்குடி வட்டாரங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட உள்ளது.
விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக 20 கிலோ விதை ஒரு ஏக்கருக்கு மட்டும் வழங்கப்படும். முன்னுரிமை மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, பட்டா, சிட்டா, நகலுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெற்று சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *