• June 7, 2025

சாலையோர உணவகத்தில் குளிர்பானம் குடித்த சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

 சாலையோர உணவகத்தில் குளிர்பானம் குடித்த சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின் ராஜ். இவரது மனைவி, மகன் ஆண்டனி ஜான் (வயது 14) மற்றும் மகள் ஏஞ்சலின். இவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்றிருந்தனர்.
திருவிழா முடிந்த பின்னர் நேற்று இரவு அரசு பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது, விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது.
அந்த உணவகத்தில் அவர்கள் சாப்பிட்டனர். அப்போது ஆண்டனி ஜானுக்கு அவரது தாயார் குளிர்பானம் வாங்கி கொடுத்தார். அதை குடித்த பின்னர் சிறுவன் ஆண்டனி ஜான் 4 முறை வாந்தி எடுத்தான். அதன் பின்னர் பஸ்சில் ஏறி ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
பஸ் திண்டிவனம் அருகே வந்த போது ஆண்டனி ஜானை அவரது தாய் எழுப்ப முயன்றபோது அவன் கண் விழிக்காததால் அதிர்ச்சி அடைந்தார். உடனே பஸ்சில் இருந்தவர்கள் சிறுவனுக்கு முதலுதவி செய்தனர். அதன் பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் வந்த உடன் சிறுவனை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு சிறுவனின் தாயார் கதறி அழுதார்.

இது பற்றி அறிந்ததும் சென்னையில் இருந்து ஜெபஸ்டின் ராஜ் விரைந்து வந்தார். மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இது தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *