கிழவிபட்டி, கெச்சிலாபுரம் பகுதிகளில் 25-ந்தேதி மின்தடை

கோவில்பட்டி விஜயாபுரி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின்தொடரை கெச்சிலாபுரம், மந்திதோப்பு மின்தொடராக இரண்டாக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள பணிகள் 25-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. எனவே மேற்படி பணிகள் நடைபெறும் பொருட்டு கிழவிபட்டி, கெச்சிலாபுரம் ஆகிய பகுதிகளுக்கு 25-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்து உள்ளார்.
