கொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; போலீசார் பேச்சுவார்த்தை

கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பொன்ராஜ் (வயது 63). நேற்று பகல் நேரத்தில் இவர் தெற்கு திட்டங்குலம் காலனி பகுதியில் உள்ள அவரது தோட்டத்துக்கு சென்றபோது அங்கு மறைந்து இருந்த 4 பேர் சேர்ந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடம் சென்று பொன்ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஒருவர் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இன்று காலை பொன்ராஜ் உடற்கூறு ஆய்வு முடிந்ததும், உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது பொன்ராஜ் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
அதன்பிறகு பொன்ராஜ் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். வாங்க உறவினர்கள் மறுப்பு – பொன்ராஜ் கொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தினார்கள். இதை தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொன்ராஜ் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆகஸ்டு 15 சுதந்திரம் தினம் அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் தான் முக்கிய காரணமாக உள்ளது.
கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகள் முறையாக கலந்துகொண்டார்களா? யாரெல்லாம் பங்கேற்றனர், வாக்குவாதத்தில் இடம் பெற்றவர்கள் யார்? என்பது குறித்து எல்லாம் விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் இதற்கு முந்தைய தீர்மானங்கள் சரியாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி அதிகாரிகள் உரிய விளக்கம் கொடுத்திருந்தால், இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என்ற கருத்தும் உலா வருகிறது,
.
ஒரு ஊராட்சிக்கு 5 வருட நிதியாக ரூ. 5 முதல் ரூ. 6 கோடி வரை ஒதுக்கப்படுகிறது. இந்த பணம் முறையாக பயன்படுத்தபடுகிறதா ? என்பதை எல்லாம் மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.
இனி வரும் கிராம சபை கூட்டங்களில் மக்கள் சொல்லும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
