தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் குவிந்த மக்கள்

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5 ம்தேதி வரை திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி நடந்தது. விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிந்தபிறகும் ஆலயத்துக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று இரவு ஆயிரக்கனக்கானர்கள் கோவில் வளாகத்தில் கூடினார்கள். சிறுவர்களை கவரக்கூடிய வகையில் விளையாட்டு பொருட்கள் விற்கப்பட்டன, பொருட்காட்சியும் நடந்தது.

