கோவில்பட்டியில் நேற்று 14 மி.மீ.மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை 8 மணி வரை நிலவரப்படி மொத்தம் 26.3 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் 14 மி.மீ, கயத்தாறில் 4 மி.மீ, தூத்துக்குடியில் 2 மி.மீ சாத்தான்குளத்தில் 2.3 மி.மீ மழை பெய்துள்ளது.
கோவில்பட்டியில் நேற்று பெய்த சிறு மழைக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி புதுரோடு. ஏற்கனவே குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் வாறுகால் பணிக்காக சாலையின் ஒரு பகுதியில் சாக்கடை அடைக்கப்பட்டு சாலையில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மழை நீருடன் சாக்கடையும் கலந்து ஓடியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
