கோவில்பட்டியில் இன்றைய மின்தடை 2௦-ந் தேதிக்கு மாற்றம்

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (16-ந்தேதி) கோவில்பட்டி உப மின்நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக 2௦-ந்தேதிக்கு மாற்றி அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகளை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ளார்.
அதன்படி கோவில்பட்டி, கோவில்பட்டி மெயின்ரோடு, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, முகமது சாலியாபுரம், லட்சுமி மில், இளையரசனேந்தல் ரோடு, இனாம் மணியாச்சி ஆகிய பகுதிகளுக்கு அன்றைய தினம் மின்சாரம் தடை படும்,
