60 வயது நடிகருடன் திருமணமா ? பிரபல நடிகை மறுப்பு
![60 வயது நடிகருடன் திருமணமா ? பிரபல நடிகை மறுப்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/07/download-2.jpg)
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை பவித்ரா. 43 வயதான பவித்ரா இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
ஏற்கனவே சுசீந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்த பவித்ரா கடந்த 6 ஆண்டுகளாக அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பழம்பெரும் தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவின் மாற்றாந்தாய் மகனும் நடிகர் மகேஷ் பாபுவின் ஒன்றுவிட்ட சகோதரருமான நரேஷ் பாபு (வயது6௦) வை பவித்ரா திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நரேஷ் பாபுவும் பவித்ராவும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்த போது நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி, அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடித்தார். மேலும் நடிகை பவித்ரா பணத்துக்காக தனது கணவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார்
இந்த நிலையில் ரம்யாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பவித்ரா கூறி இருப்பதாவது:-
நான் நான்காவதாக திருமணம் செய்யவில்லை. எனக்கு இதுவரை விவாகரத்து நடைபெறவில்லை. எனக்கும் நரேசுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் நரேஷின் மனைவி என் மீது வேண்டுமென்றே பழி போடுகிறார். எனக்கும் நரேசுக்கும் 4 ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. நான் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து 4, 5 படங்களில் நடித்துள்ளோம்.
எனது கணவர் சுசீந்திர பிரசாத்தை திருமணம் செய்யும் போது அவரிடம் பணம் இல்லை, வீடு இல்லை, கார் இல்லை, ஆனாலும் அவருடன் 11 வருடங்கள் வாழ்ந்து இருக்கிறேன். அவரை பிரிந்த பிறகும் எங்களுக்குள் கடந்த 6 ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருகிறது
. நரேஷின் அறிமுகம் கிடைக்கும் போது அவர் மகேஷ் பாபுவின் சகோதரர் என்று எனக்கு தெரியாது. ஒன்றாக பணியாற்றும் போதுதான் நரேஷும் நானும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். வீட்டில் யாரும் இல்லை என்று அவர் கூறினார். ரம்யா தேவையில்லாமல் அவரது குடும்ப பிரச்சினையில் என்னை இழுகிறார். இதுவரை ரம்யா ரகுபதியை நேரில் பார்த்தது கூட இல்லை.
எனது கணவரிடம் இருந்து நான் விவாகரத்து பெறுவது என்னுடைய பிரச்சினை. அதை தானே பார்த்துக்கொள்வேன். சமூக வலைதளங்களில் என்னை பற்றி பரவும் வதந்திகள் தொடர்பாக சைபர் கிரைம்மில் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு நடிகை பவித்ரா கூறினார்.
இதுகுறித்து பவித்ராவின் கணவர் சுசீந்திர பிரசாத் கூறுகையில்,” எனது மனைவி பவித்ராவுடன் திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது . எங்கள் திருமணம் இந்து திருமண சட்டப்படி நடைபெற்றது. எங்களது திருமண உறவில் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளனர். பவித்ரா மீது எனக்கு மரியாதை உள்ளது, எனது மனைவி குறித்த இந்த வதந்திகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாக சந்தேகம் உள்ளது” என்றார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)