• June 6, 2025

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3௦ பேருக்கு கொரோனா

 தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3௦ பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 1000-ஐ தாண்டிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 82 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *