மனைவியை கத்தியால் தாக்கியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கார்த்தீசன் (வயது 36). இவரது மனைவி தங்கம் . சம்பவத்தன்று கார்த்தீசன் மதுபோதையில் மனைவி தங்கத்திடம் இருசக்கர வாகனம் வாங்க தங்க நகைகளை தருமாறு தகராறு செய்துள்ளார். தங்கம் நகைகளை தரமறுக்கவே ஆத்திரமடைந்த கார்த்தீசன் மனைவி தங்கத்தை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தங்கம் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமலோற்பவம் வழக்குபதிவு செய்து கார்த்தீசனை கைது செய்தார்.
