• June 7, 2025

ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

 ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி குமரன் நகர் பகுதியை சேர்ந்த போஸ்கோ ராஜா என்பவரது மனைவி சகாய சித்ரா (வயது 52). இவர் போல்பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அவரிடம் இருந்து 7 ¼ பவுன் தங்க தாலி செயினை பறித்த வழக்கில் லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜா (எ) நாகூர் ஹனிபா மகன் லேடன் (எ) பின்லேடன் (19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 2 பேரையும் வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய எதிரியான லேடன் (எ) பின்லேடன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் அறிக்கை சமர்பித்தார்.
கயத்தார் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட தாக உச்சிமகாளி (45), மணிகண்டன் (29) , சுடலைமணி (33) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ 16,000/- மதிப்புள்ள 9 ½ கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 58 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்களில் முக்கிய எதிர்களான உச்சிமகாளி, மணிகண்டன் மற்றும் சுடலைமணி ஆகிய 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து அறிக்கை அளித்தார்.
இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கபரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் , மேற்படி 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் உட்பட 110 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *