பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் இங்கு உள்ளனர்; மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி பேச்சு


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் செயல்தளைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
உட்கட்சி மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்புகள் நிலவும் வேளையில் , கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதன்படி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்,
ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பேசுகையில் கூறியதாவது:-
பா.ம.க.வின் பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் பதவி இன்று வரும் போகும், அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன்.
பட்டாளி மக்கள் கட்சி என்பது நான் அல்ல, நீங்கள் தான். தொண்டர்கள் இல்லை என்றால் பட்டாளி மக்கள் கட்சி இல்லை என்பதை உணர வேண்டும்.
சமூக நீதி போராளி ராமதாஸ் கட்சி தொடங்கினார், அவரது கொள்கையை நிலைநிறுத்த களத்தில் இறங்குவோம்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் நாங்கள். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தற்போது இங்கு உள்ளனர். சிறப்பு சந்திப்பு ஒன்று விரைவில் நடைபெறும்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.
அன்புமணிக்கு ஆதரவாக கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகளை நிறுவனர் ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பா.ம.க. இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
