• June 6, 2025

தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம் ; மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

 தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம் ; மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில், சட்டசபை தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்நிலையில் இன்று சென்னையை  அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள  ஓட்டலில் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர் என 2000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இந்த கல்வி விருது விழாவில், இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்று உள்ளனர்.இந்த விருது விழா வழங்கும் விழாவின் தொடக்கத்தில் விஜய் பேசியதாவது:- 

மை டியர் யங் லீடர்ஸ் & பேரன்ஸ், படிக்கும் போது ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்ல, நீட் மட்டுமே உலகம் இல்லை, பெற்றோரிடம் ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்க ..

நீட் மட்டும் தான் உலகமா? படிப்புல சாதிக்கணும் ஆனா ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதிக்கணும்னு நினைக்காதீங்க, Stress ஆகாதீங்க நீட் மட்டும் தான் உலகமா? நீட்ட தாண்டி சாதிக்க பல விஷயங்கள் இருக்கு

“வெயிலிலும், மழையிலும் சாதி இருக்கா?” பெரியாருக்கே சாதி சாயம் பூசுகிறார்கள், சாதி, மதத்தை ஒத்திவைக்க வேண்டும், சாதியை எவ்வளவு தூரமாக ஒதுக்க முடியுமோ ஒதுக்கி விடுங்கள் –

தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம்; உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை அடுத்த ஆண்டு தேர்தலின்போது வண்டி வண்டியாக கொட்டுவார்கள்; ஓட்டுக்கு பணத்தை கொட்டும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றும் எனக்கு தெரியும் –

ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயமல்ல, சாதாரண விஷயம்தான்; நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்.

மத்திய அரசு நடத்திய யுபிஎஸ்சி தேர்வில் சாதிய சாயம் பூசுவது போல கேள்வி இடம் பெற்றது கண்டித்தக்கது. போதைப்பொருளை போல சாதியையும் மதத்தையும் ஒதுக்கி வையுங்கள்.

சாதி, மத பிரிவினைவாத சிந்தனைகள் பக்கம் செல்லாதீர்கள். தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சிந்தனையோடு இருங்கள், அதுதான் ஏஐ உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி”

இவ்வாறு விஜய் பேசினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *