அகில இந்திய ஆக்கி: கோவில்பட்டி அணி மோதும் காலிறுதி போட்டி இன்று மாலை நடக்கிறது

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.
10 நாட்கள் நடைபெறும் இப்போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லீக் முறையிலான போட்டிகள் முடிவடைந்து இன்று காலை காலிறுதி போட்டிகள் தொடங்கி உள்ளன.

காலையில் முதல் காலிறுதி ஆட்டம் நடந்தது, இதில் மும்பை யூனியன் வங்கி அணியை தோற்கடித்து நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
கோவில்பட்டி அணி
இதை தொடர்ந்து இன்றுமாலை 4.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது காலிறுதி போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் பெங்களூரு ஆக்கி கர்நாடகா அணியும் மோதுகின்றன.

மாலை 6.30 மணிக்கு நடைபெறும் மூன்றாவது காலிறுதி போட்டியில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஆக்கி அணியும் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஆக்கி கழக அணியும் மோதுகின்றன.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் நான்காவது காலிறுதி போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதுகின்றன.

