கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: முதல் காலிறுதி ஆட்டத்தில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.
10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். எ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடந்து வருகின்றன,

கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
போட்டியின் ஏழாம் நாளான இன்று 29ம் தேதி காலை 7 மணி அளவில் நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும் மும்பை யூனியன் வங்கி அணியும் மோதின.

இதில் 5:2 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர்கள் குருசிம்ரன் சிங் 3வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்), சச்சின் 12வது நிமிடத்திலும் (பீல்டு கோல்), இண்டர் பால் சிங் 25வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மற்றும் சுமித் டோப்போ 34வது & 59வது நிமிடங்களிலும் (பீல்டு கோல்) மொத்தம் 5 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மும்பை யூனியன் வங்கி அணி வீரர்கள் பீம் படல 21வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மற்றும் ரிடெண்டெர் சிங் 41வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) தலா ஒரு கோல் அடித்து மொத்தம் 2 கோல்கள் அடித்தனர்.
சுரேஷ் குமார் மற்றும் சுப்பையா தாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் லவ்ப்ரீத் சிங் -க்கு வழங்கப்பட்டது.
நேற்றைய போட்டிகள்
நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் மும்பை சென்ட்ரல் ரெயில்வே அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதின.
இதில் 4:1 என்ற கோல் கணக்கில் மும்பை சென்ட்ரல் ரெயில்வே அணி வெற்றிப் பெற்றது.

இப்போட்டியில் மும்பை சென்ட்ரல் ரெயில்வே அணி வீரர் பிரஜ்வால் மொஹர்கர் 11வது நிமிடத்திலும் (பீல்டு கோல்), ஜோகிந்தர் சிங் 18வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்), யுவராஜ் வால்மீகி 19வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மற்றும் விகாஷ் வால்மீகி 48வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மொத்தம் 4 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
சென்னை தமிழ்நாடு போலீஸ் அணி வீரர் ஜெபர்சன் ஜோஷுவா 54வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் அடித்தார்.
சரவணன் மற்றும் சுப்பையா தாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது மும்பை சென்ட்ரல் இரயில்வே அணி வீரர் யுவராஜ் வால்மீகி-க்கு வழங்கப்பட்டது.
இரவு 8 மணியளவில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் பெங்களூரு கனரா வங்கி அணியும், நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மோதின.
இதில் 3:0 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றிப் பெற்றது.
இப்போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர் விகாஷ் 9வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்), கார்த்தி 37வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மற்றும் நாச்சப்பா 49வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மொத்தம் 3 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
பாலாஜி குமார் மற்றும் அஜித் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர் மாரிஸ்வரன் சக்திவேல்-க்கு வழங்கப்பட்டது
