ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு

1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வரும் 2ம் தேதி (ஜூன்) பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும்,பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
*முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

*மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.
*மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.
*செவ்வாய் கிழமைகளில் 6-12 வகுப்பினருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
என்பன போன்ற நெறிமுறைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
