• June 6, 2025

கோவில்பட்டி யூனியன் கிளப் சார்பில் வட்டார இறகுப்பந்து போட்டி

 கோவில்பட்டி யூனியன் கிளப் சார்பில் வட்டார இறகுப்பந்து போட்டி

கோவில்பட்டி யூனியன் கிளப் சார்பில் வட்டார அளவிலான இறகுப் பந்து போட்டி நடந்தது. போட்டிகள் இரட்டையர் பிரிவு மற்றும் 40, 50 வயது ஆண்கள் இணைந்து ஆடும் இரட்டையர் போட்டி என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

ஆண்கள் இரட்டையர் இறுதி போட்டியில் டர்போ பேட்மிண்டன் கிளப்பைச் சேர்ந்த வீரர்கள் ஹரி விக்னேஷ் – சஞ்சய் முதல் பரிசுக் கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசு பெற்றனர்.

2-வது இடம் பெற்ற சரவணா ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர்கள் ஜெயசான் – பாலா ஆகியோருக்கு கோப்பை மற்றும் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதே போல், 40, 50 வயது ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் யூனியன் கிளப்பைச் சேர்ந்த செல்வின் பால் – ராஜா முதலிடம் பிடித்து கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசு பெற்றனர்,

2-வது இடம் பிடித்த யூனியன் கிளப்பைச் சேர்ந்த மருத்துவர் சிவநாராயணன் – அருள்காந்தராஜ் ஆகியோருக்கு பரிசுக்கோப்பை மற்றும் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

பரிசுகளை விநாயகா ரமேஷ், வீராச்சாமி, நாராயணசாமி, வழக்கறிஞர் சீனிவாசன்,பரமேஸ்வரன்,சீனிவாசன், முத்துச்செல்வன் ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுகளை யூனியன் கிளப் விளையாட்டு இயக்குநர் டாக்டர் முருகராஜ், ஆலோசகர் சின்னச்சாமி,யூனியன் கிளப் மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவினர் செய்திருந்தனர். முடிவில் ராஜ்குமார் நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *