• June 8, 2025

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக  ஆலோசனை கூட்டம்

 தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக  ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடகழகம் ஆலோசனை கூட்டம் மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் கோவில்பட்டியில் இன்று நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் வரும் 30ம் தேதி தர்மபுரியில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்வது மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி உறுப்பினர்கள் சேர்க்கவும் மற்றும் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பூத்கமிட்டி அமைத்து பாகமுகவர்கள் கூட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட தேமுதிக அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட துணைசெயலாளர் ராஜபாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள்  முருகன், காளிதாஸ், ஒன்றியசெயலாளர்கள் கோவில்பட்டி மேற்கு பெருமாள்சாமி, விளாத்திகுளம் கிழக்கு தங்கச்சாமி, மேற்கு மாரியப்பன், புதூர் கிழக்கு ஆறுமுகபெருமாள், மேற்கு மணிகண்டன், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன், கயத்தார் நகரசெயலாளர் கண்ணண், சென்னையம்பட்டி நாராயணண், மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா, துணைசெயலாளர் சந்தனமாரி  தொண்டரனி தங்கமணி மதிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *