கோவில்பட்டி பங்குனி திருவிழா 7-வது நாள்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு 7வது திருநாள் திருவிழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி இரவு 9 மணிக்கு சிவகாமி அம்பாள் நடராஜர் சுவாமமற்றும் மாணிக்கவாசகர் சுவாமி சப்பரத்தில் சிவப்புசாத்தி எழுந்தருளல் திருவீதி உலா நடைபெற்றது. மண்டகப்படிதாரர் கோவில்பட்டி சைவவேளாளர்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி- அம்பாள் தரிசனம் செய்தனர்
