சிவகாசி என்ஜினீயரிங் கல்லூரி விளையாட்டு விழா

சிவகாசி சல்வார்பட்டியில் உள்ள ரெங்கநாயகி வரதராஜ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியின் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரியின் துணை சேர்மன் பிருந்தா ராகவன் தலைமை தாங்கினார். செயலாளர் ராகவன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அர்ஜுனா விருது பெற்ற மனத்தி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி,வாழ்த்துரை வழங்கினர்.
விளையாட்டு விழா ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் குமார் மற்றும் உடற்கல்வித்துறை தலைவர் விஜயகுமார் செய்திருந்தனர்.


