கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்

கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் மற்றும் சங்கரலிங்கபுரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.அமமுக துணை பொதுச்செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா நீர் மோர் பந்தலை திறந்து வைத்து,பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள்,நீர் மோர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட செயலாளர் பூலோகபாண்டியன், அமைப்புச் செயலாளர் சிவபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் கணபதி பாண்டியன், மகேந்திரன், ஈஸ்வரபாண்டியன், விஜயபாஸ்கரன், மாவட்ட நிர்வாகிகள் அமிர்தராஜ் பாண்டியன், கிளவிபட்டி குமார் பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு செந்தில்குமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் லட்சம்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கணேஷ் பாபு, அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் கருப்பசாமி கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் செல்வம்,வார்டு செயலாளர்கள் பாண்டி செல்வம், முத்து கருப்பசாமி, குருநாதன்,நகர துணை செயலாளர் சிவக்குமார் பாண்டியன், இலக்கிய அணி செயலாளர் பேராட்சிபாலா,நகர இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், அழகுராஜ்,கார்த்திக்ஆகியோர் செய்திருந்தனர்


