அமைச்சர் கே.என்.நேரு வீடு , சகோதரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் கே.என்.நேரு வீடு, அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலணி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் சகோதரரின் வங்கிக் கணக்கில் அதிக அளவில் நடந்துள்ள பரிவர்த்தனை அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே சோதனையில் இறுதியிலேயே சோதனைக்கான முழு விரவம், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும்.
அதைபோல அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் நேருவின் சகோதர்கள், ரவிச்சந்திரன், மணிவண்ணன், சகோதரி உமா மகேஸ்வரி இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில் ஆதரவாளர்கள் திரண்டு வருகிறார்கள்.
