• June 8, 2025

கோவில்பட்டி, சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் மழை; கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிப்பு

 கோவில்பட்டி, சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் மழை; கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிப்பு

தமிழகத்தில்  பல மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. கோவில்பட்டியில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இரவு 10 மணிக்கு மேல் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது.

இதில் நகரின் பல இடங்களில்  சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் கீழே சாய்ந்து விழுந்தன. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

பலத்த காற்று, மழை காரணமாக மின்சார விநியோகம் 3௦ நிமிடம் நிறுத்தப்பட்டது. பின்னர் இடையிடையே அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது,.

கோவில்பட்டி மட்டுமின்றி எட்டயபுரம், காமநாயக்கன்பட்டி, கயத்தார், கடம்பூர்,இளையரசநேந்தல் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது; அப்பனேரி பகுதியில் இரவில் மழை தொடர்ந்து 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

புளியங்குளம், லட்சுமி அம்மாள்புரம் உள்ளிட்ட சில கிராமங்களில் இரவு முழுவதும் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. இன்று காலை 8 மணி அளவில் மின்சார சப்ளை சீரானது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *