• June 7, 2025

தேசிய வரைபடம் கோலத்தில் சுதந்திரப் போராட்ட தலைவர்கள்  உருவத்தை  வரைந்து கல்லூரி மாணவிகள் அசத்தல்  

 தேசிய வரைபடம் கோலத்தில் சுதந்திரப் போராட்ட தலைவர்கள்  உருவத்தை  வரைந்து கல்லூரி மாணவிகள் அசத்தல்  

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76 வது குடியரசு தின விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

நாடார் உறவின்முறைச் சங்க பொருளாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

கல்லூரி மாணவிகள் தேசிய வரைபடம்  கோலத்தில்  சுதந்திர போராட்ட தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ஆகியோரின் திருவுருவப் படத்தை வரைந்து அசத்தினர்.

கல்லூரி முதல்வர் செல்வராஜ்.தமிழ் துறை பேராசிரியர் கனகவல்லி, இயற்பியல் துறை மாணவர் சாய் சூர்யா,கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மாணவி மரிய அனுசியா ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர். மாணவர்கள் அனைவரும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விழா தொடக்கத்தில் மாணவி கவின்கிருத்திகாதேவி அனைவரையும் வரவேற்றார் முடிவில் மாணவி திவ்யஜோதி நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *