கோவில்பட்டி பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்


கோவில்பட்டி நகராட்சி 21 வது வார்டு ஆழ்வார்தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் திமுக நகரச் செயலாளருமான கருணாநிதி தொடங்கி வைத்தார். பொங்கல பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி, சேலை இடம் பெற்றிருந்தது.
நிகழ்ச்சியில் வட்டவழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, 21வது வார்டு கவுன்சிலர் உலகராணி தாமோதரன்.தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் மகேந்திரன்,திமுக பிரதிநிதிகள் நாகராஜன்,கடல் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் ஊராட்சியில் நியாய விலைகடையில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் பொங்கல் தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
திமுக நிர்வாகிகள் தாமோதரகண்ணன், புவனேஷ்குமார், ஒன்றிய துணைசெயலாளர் ராஜன்,கிளைச்செயலாளர்கள் முத்துராமலிங்கம், ரெங்கசாமி, மகளிரணி ஜெயா, ஜானகி,செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
