கனிமொழி எம்.பி. பிறந்தநாளில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு ( 5-1-2025 ) அன்று கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு நேற்று அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டிதலின்படி, கோவில்பட்டி நகர திமுக செயலாளர் கருணாநிதி ஆலோசனையின் பேரில் பொதுக்குழு உறுப்பினர் ராமர் தங்கமோதிரம் அணிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா,அவைத்தலைவர் முனியசாமி,துணை செயலாளர் அன்பழகன், பொருளாளர் ராமமூர்த்தி,மாவட்ட பிரதிநிதிகள் ரவிந்திரன், மாரிச்சாமி,மாவட்ட மகளிர் சமுக வலைதளப்பொருப்பாளர் இந்துமதி கவுதமன், நகர துணை செயலாளர் உலகராணி,நகர தொண்டரணி அமைப்பாளர் சோனி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுதா, ஜேஸ்மின்,சித்ரா,மாரியம்மாள்,உமாமகேஸ்வரி மற்றும் வார்டு செயலாளர்கள் அமலிப்ரகாஷ், சித்தன், தாமோதரன், துரை, சிங்கராஜ், சுரேஷ் மற்றும் கலந்து கொண்டனர்.
