கோவில்பட்டி விழாவில் 143 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல் வெளியீடு

சென்னை அனைத்திந்திய தமிழ் சங்கம் சார்பில் பாரதியார் 143 வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி காயத்ரி மண்டபத்தில் நடந்தது. விழாவின் தொடக்கமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த இலக்கிய தலைவர்கள் முன்னிலையில் 143 கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது.
தொடர்ந்து 143 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு நடந்தது. அனைத்திந்திய தமிழ் சங்கத்தின் தலைவர் ஆவடிக்குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல தலைவர் முருகசரஸ்வதி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு நூல் வெளியிட்டு விருது வழங்கினார். பல்வேறு துறையை சார்ந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக வேளாண் விஞ்ஞானி பொன்னுச்சாமி நாயக்கர்,மருத்துவர்கள் என்.டி.சீனிவாசன், பூவேஸ்வரி, தொழிலதிபர்கள் ரவிமாணிக்கம், பாபு,திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, செயலாளர் நம்.சீனிவாசன், தமிழரசன், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஷ்டோபர், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் தலைவர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
