18 சப்-இன்ஸ்பெக்டர்கள்  பணியிட மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு  ஆல்பர்ட் ஜான் உத்தரவு

 18 சப்-இன்ஸ்பெக்டர்கள்  பணியிட மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு  ஆல்பர்ட் ஜான் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 18 சப்-இன்ஸ்பெக்டர்களை நிர்வாக காரணங்களுக்காவும், விருப்ப மாறுதல் அடிப்படையிலும் பணியிடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு  ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். 

கோவில்பட்டி  கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தூத்துக்குடி தாளமுத்துநகருக்கும், புதியம்புத்தூர் தரன்யா தென்பாகத்திற்கும், முறப்பநாடு காவுராஜன் தூத்துக்குடி தென்பாகத்திற்கும், தருவைகுளம் முனியசாமி தூத்துக்குடி வடபாகத்திற்கும், கண்ட்ரால் ரூம் ராய்ஸ்டன் மத்தியபாகத்திற்கும், தென்பாகம் மாணிக்கராஜ் முறப்பநாடு காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதே போல குரும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெர்ஸ்லின் புதியம்புத்தூருக்கும், வடபாகம் சுப்புராஜ் சிப்காட்டிற்கும், கழுகுமலை மணிமொழி புதுக்கோட்டைக்கும், எஸ்பி அலுவலகம் ஸ்டீபன் தருவைகுளத்திற்கும், சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜன் குரும்பூருக்கும், மணியாச்சி முத்துசெல்வம் திருச்செந்தூர் தாலுகாவிற்கும், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்ட முத்துமாலை மணியாச்சிக்கும், கோவில்பட்டி கிழக்கு ஸ்ரீஅருள்மொழி ஓட்டப்பிடாரத்திற்கும், ஏரல் முகம்மதுரபி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தாலுகா சுந்தர் கழுகுமலைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *