வழக்குகளில் இருந்து விடுபட டி.டி.வி.தினகரன், பா.ஜ.க.விடம் சரண்; டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னையில் அ.தி.மு.க.அமைப்புசெயலாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க. அழிவு பாதைக்கு செல்லும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜெயக்குமார் கூறியதாவது;-
“பா.ஜ.க. அல்லாத மற்ற எந்த கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியும், பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்களுடன் கூட்டணி நேற்றும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இல்லை என்பதை பொதுச்செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை பலமுறை எங்கள் பொதுச்செயலாளர் கூறிவிட்டார்.
டி.டி.வி.தினகரன் தன் மீதான வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக இன்று பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார். அ.தி.மு.க. என்பது தன்மானத்தோடு இயங்கும் இயக்கம். யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. கட்சியின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பொதுச்செயலாளர் முடிவு எடுத்துள்ளார். அந்த முடிவுதான் தொடரும், அதில் எந்த மாற்றமும் இருக்காது.”
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
எம்ஜிஆர் நினைவு நாள்
முன்னதாக முன்னாள் அமைச்சர் அமைச்சருமான டி,ஜெயக்குமார் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அளித்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். 37-வது ஆண்டு நினைவு நாளான 24.12.2024 செவ்வாய் கிழமை கடைப்பிடிக்கப்ப்டுகிரடு.
அன்றைய தினம் காலை 10 மணியளவில், கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் திறந்தவெளி மேடை அமைத்து உறுதிமொழிகள் மேற்கொள்ளவும் உள்ளோம். 24.12.2024 அன்று காலை 10 மணி முதல் 11.30 மணிவரை
இந்நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால், அதற்கான
அனுமதியும் பாதுகாப்பும் அளிக்குமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
