• June 8, 2025

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர்  ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணியக்காரன்பட்டி, சுப்பலாபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர், சாலை,வாறுகால், ஆழ்துளை கிணறு மற்றும் தொட்டி, சுடுகாடு எரிமேடை வசதி, காத்திருப்போர் அறை வசதிகளும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துககு தமிழ்ப்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார்., புதூர் ஒன்றிய செயலாளர் வெள்ளைவேந்தன், மாவட்ட நிதிச் செயலாளர் மதிவேந்தன், வேல்முருகன், பாலமுருகன் மற்றும் மணியக்காரன்பட்டி, சுப்பலாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் திரவியத்திடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *