தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ரூ.2 லட்சம் வெள்ள நிவாரண நிதி

தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜெ.விஜயானந்த், பொருளாளர் என்..ராஜவேல், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.சுரேஷ், ஆர்/வெங்கடேஷ், மேலாளர் தங்கமாரியப்பன், போப் மகாதேவன், மகாலட்சுமி ஜி.பாண்டியன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை சந்தித்தனர்,
அப்போது தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் காமரின் தீப்பெட்டி இண்டஸ்ட்ரீஸ் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதி அளிக்கப்பட்டது,.
மேலும் `துடிசியா’ கே.நேரு பிரகாஷ், துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ராஜாசெல்வின் மற்றும் கோவில்பட்டி நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.
