தெற்குகோனார் கோட்டை பள்ளியில் நடந்த விழாவில் பாரதியார் வேடமணிந்த சிறுவர்கள் உறுதிமொழி

நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டயபுரத்து முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியார் 143 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது,..
கோவில்பட்டி அருகே தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாரதியின் வேடம் அணிந்து வந்தனர்.
அவர்கள் 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும்,குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திடவும்,குழந்தைகளின் வளர்ச்சி,கல்வி, பாதுகாப்பிற்கு பாடுபடவும்,உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்,
பின்னர் இளம் பாரதிகள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பாரதியின் பாடல்களை பாடி வந்தேமாதரம் கோஷமிட்டு மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
பல்வேறு கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இராஜையா தலைமை தாங்கினார்.
கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், இனாம்மணியாச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பள்ளி ஆசிரியை ஜெயராணி அனைவரையும் வரவேற்றார்,
பொன்னுஸ் நேச்சுரல் நிறுவன உரிமையாளர் பொன்னுச்சாமி பரஞ்ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி இளம் பாரதிகளின் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜீ, ஊர் பிரமுகர் ராமசாமி, என்ஜீனியர் ஜானு, பில்டிங் காண்ட்ராக்டர் கணேசன் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி மாணவர் இன்பராஜ் நன்றி கூறினார்.
