கோவில்பட்டியில் பிணமாக கிடந்த மாணவன், வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதையா? பரபரப்பு தகவல்கள்



கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியரின் 2 வது மகன் கருப்பசாமி (வயது 10). 5 வது வகுப்பு படிக்கும் இந்த மாணவன் நேற்று வீட்டில் இருந்த போது திடீரென காணமல் போய்விட்டான்,
பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத சூழலில் நேற்று காலை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவன் மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என்றார் கோணத்தில் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவன் கருப்பசாமி பகல் முழுவதும் ஒரு வீட்டில் அடைத்துவைத்து சித்ரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் பகல் முழுவதும் போலீஸ் சோதனை நடந்த போது மொட்டை மாடியில் கண்டுபிடிக்கபடாத கருப்பசாமி உடல் நேற்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது,
எனவே அதிகாலை நேரத்தில் சிறுவன் உடலை யாரோ மொட்டை மாடிக்கு கொண்டு வந்து போட்டு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பகலில் கருப்பசாமியை மறைத்து வைத்து இருந்தவர்கள், இறந்துபோனதை அறிந்து பயந்து போய் மொட்டை மாடியில் போட்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இருப்பினும் மாணவனை கடத்தி மறைத்து வைத்ததற்கான காரணம் மர்மமாக உள்ளது. பெற்றோர் மீதான பகை காரணமாக சிறுவனை கடத்தி சென்று மறைத்து வைத்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.
இப்படி பல்வேறு சந்தேகங்கள் அடிப்படையில் அந்த பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
