இந்திய அணி வீரர் விராட் கோலியை பாராட்டிய ஆஸ்திரேலியா பிரதமர்

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் என்பது தேசிய விளையாட்டாகும். ஆஸ்திரேலியாவுக்கு எந்த பெரிய அணிகளும் கிரிக்கெட் விளையாட சென்றால் அவர்களை அந்நாட்டு பிரதமர் வரவேற்று தேநீர் விருந்து அளிப்பது என்பது அந்நாட்டு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்ட் நகரில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக 2 நாட்கள் கொண்ட பகலிரவு பறிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி கான்பெர்ரா சென்ற இந்திய அணி வீரர்கள் நேற்று முன் தினம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்து பேசினர்.
கேன்பேராவில் வந்த இந்திய அணி வீரர்கள் வரிசையாக நிற்க ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி கைகுலுக்கி உரையாடினார். அப்போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். முதலில் பும்ராவிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் உங்களுடைய பந்து வீச்சு முறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சிறந்த பணியை செய்திருக்கிறீர்கள் என்று பாராட்டினார். அதற்கு பும்ரா நன்றி கூறினார்.
இதனை அடுத்து விராட் கோலியை பார்த்ததும் சிரித்து கைகுலுக்கிய பிரதமர், நீங்கள் பெர்த்தில் நல்ல காலத்தை அனுபவித்திருப்பீர்கள். உங்களுடைய ஆட்டம் பிரமாதமாக இருந்தது. ஒரு கட்டத்தில் எங்கள் அணி பின்னடைவை சந்திக்கிறது என்று எண்ணமே தோன்றாமல் நாங்கள் பார்த்து கொண்டிருந்தோம் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த விராட் கோலி நாங்கள் எப்போதுமே எங்களுடைய சொந்த ஸ்டைலை வெளிப்படுத்தி விறுவிறுப்பாக்குவோம் என்று பதிலளித்தார். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா பிரதமர் ஒவ்வொருவரையும் சந்தித்து வாழ்த்து கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
