• June 6, 2025

மராட்டிய முதல்வர் யார் என்பது இன்னும் ஓரிரு நாள்களில் தெரிவிக்கப்படும்: ஏக்நாத் ஷிண்டே

 மராட்டிய முதல்வர் யார் என்பது இன்னும் ஓரிரு நாள்களில் தெரிவிக்கப்படும்: ஏக்நாத் ஷிண்டே

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, மராட்டிய மாநிலத்தின் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மராட்டியத்தில் பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி அமோக வெற்றிப்பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ள நிலையில், புதிய முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இச்சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “சந்திப்பு நன்றாகவும் நேர்மறையாகவும் இருந்தது. இதுவே முதல் சந்திப்பு. அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசித்தோம். மகாயுதியின் இன்னொரு கூட்டம் இருக்கும். இந்த கூட்டத்தில் முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த சந்திப்பு மும்பையில் நடைபெறும்” என்று தெரிவித்தார். மேலும் அவர், இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்” என்றும் கூறினார்.

அமித் ஷா உடனான சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேவேந்திர பட்னவிஸ், “முக்கியமான மராட்டிய சட்டப்பேரவை தேர்தலின்போது, போர்க்களத்தில் பெரும் ஆதரவை அளித்ததற்காகவும், தொண்டர்களை பெரிதும் ஊக்கப்படுத்தியதற்காகவும் மத்திய மந்திரி அமித் ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *