சிறப்பான திரைப்படம் ‘அமரன்’ : அனிருத் நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அமரன்’. ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அமரன் திரைப்படத்தை ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, சிம்பு உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டினர். இந்நிலையில் நடிகர் அனிருத்தும் ‘அமரன்’ படத்தை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
அனிருத் வெளியிட்டிருக்கும் அப்பதிவில், “சினிமாவின் சிறப்பான திரைப்படம் ‘அமரன்’. என் சிவகார்த்திகேயனை நினைத்து பெருமைப்படுகிறேன். சிறப்பான திரைப்படத்தை உருவாக்கிய என் அண்ணன் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் அவரது குழுவிற்கும் என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துக்களும். மேலும் கமல்ஹாசன் சார், மகேந்திரன் சார் உள்ளிட்டோருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
