ஆட்டுசந்தையை தேடி அலைய வேண்டாம் … கோவில்பட்டியில் ஆடுகள் வாங்க, விற்க புதிய பண்ணை தொடக்கம்

பண்டிகை மற்றும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு அசைவ விருந்து என்றால் ஆடு முக்கிய பங்கு வகிக்கும். ஆடு வாங்க பக்கத்து ஊர்களில் இருக்கும் சந்தைகளுக்கு சென்று பேரம் பேசி ஆடு வாங்கி வரவேண்டும். அது நல்ல ஆடா, நோய் வந்த ஆடா என்று நமக்கு தெரியாது. சமைத்து பார்த்தவுடன் தான் தெரியும்.
இப்படிப்பட்ட சந்தேகங்கள் எதுவும் இல்லாமல் நம்பிக்கையுடன் ஆடுகள் வாங்க கோவில்பட்டியில் புதிதாக அபிராமி ஆட்டுப்பண்ணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பண்ணை மந்தித்தோப்பை அடுத்துள்ள கெச்சிலாபுரம் கணபதி நகர் புனித ஓம் குளோபல் பள்ளி அருகே அமைந்துள்ளது.
அபிராமி ஆட்டுப்பண்ணை பங்குதாரர்கள் அபிராமி முருகன், முருகேஸ்வரி ஆகியோர் கூறியதாவது:-
எங்களிடம் வெள்ளாடு மட்டும் அதுவும் கிடா மட்டுமே விற்பனை செய்கிறோம். விவசாயிகள் மற்றும் வீடுகளில் வளர்ப்போரிடம் இருந்து ஆடுகளை வாங்கி வளர்த்து விற்கிறோம். எங்கள் பண்ணைக்கு வரும் ஆடுகளுக்கு உடனடியாக நோய் தடுப்பு ஊசி போட்டு விடுகிறோம்,
மேலும் ஆரோக்கியமான உணவு அளித்து ஆடுகளை வளர்க்கிறோம். 5 மாத குட்டியில் இருந்து 1 வயதுக்கு உட்பட்ட ஆடுகள் விற்பனைக்கு உள்ளன. அதற்கு மேலும் உள்ள ஆடுகள் வேண்டுமானாலும் எங்களிடம் கிடைக்கும்.
சந்தையை தேடி அலைந்து திருப்தி இல்லாமல் ஆடு வாங்குவதைவிட எங்களிடம் நம்பிக்கையுடன் ஆடுகள் வாங்கலாம். 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வாங்கினால் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியினருக்கு இலவசமாக வேன்மூலம் வீடுகளுக்கு சப்ளை செய்கிறோம்.
ஆடுகள் விற்பது மட்டுமின்றி விவசாயிகளிடம் இருந்து ஆடுகளை வாங்கவும் செய்கிறோம். எனவே விவசாயிகள் ஆடுகள் விர்கவேண்டுமானால் நேரடியாக இங்கு கொண்டு வரலாம். சரியான விலைக்கு ஆடுகள் விலைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
