நடிகர் சூர்யாவுக்கு ஜெய் பீம் என்ற ஒரே படம் போதும்: காங்கிரஸின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா

நடிகர் சூர்யா நடிப்பில்.,சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர்14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் மும்பையில் தொடங்கி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இதனால் படக்குழு மிகவும் பிஸியாக இருந்து வருகிறது. சூர்யாவும் டெல்லி, சென்னை என மாறி மாறி சென்று கொண்டிருக்கிறார். இதனிடையே நடிகர் சூர்யாவும், கேரள எம்.எல்.ஏ ரமேஷ் சென்னித்தலாவும் டெல்லி விமான நிலையத்தில் சந்தித்துள்னர்.
கேரள காங்கிரஸின் மூத்த தலைவரும், எ.ம்எல்.ஏவுமான ரமேஷ் சென்னித்தலா நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- நடிகர் சூர்யாவின் அர்ப்பணிப்பையும் சமூக உணர்வையும் மாற்ற ஜெய் பீம் என்ற ஒரே படம் போதும். அந்தப் படத்தை பார்த்த பிறகுதான் சூர்யா மீதான எனது அன்பு மேலும் அதிகரித்தது. டெல்லி விமான நிலையத்தில் தற்செயலாக சூர்யாவை சந்தித்தேன். என குறிப்பிட்டுள்ளார்.
