அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா தொடங்கியது; 21-ந் தேதி கண்திறப்பு

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அடுத்த அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு ஆண்டுதோறும் அம்மனின் உத்தரவாக பல்லி சகுனம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் இதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி மாலை அம்மனின் உத்தரவாக பல்லி சப்தம் கொடுத்தது.
உத்தரவு கிடைத்ததனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13 தேதி அன்று திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சிக்காக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.. தொடர்ந்து திங்கள் கிழமை அதிகாலை 4 மணி அளவில் கண் திறப்பு மண்டபத்தில் திருவிழா சாட்டுதல் நடைபெற்றது.
திங்கள் கிழமை முதல் ஒவ்வொரு நாளும் அம்மனின் பண்டார பெட்டி மற்றும் உற்சவர் கொலு மண்டபத்திற்கு எழுந்தருலள் நடைபெறும். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மாலை 7 மணி முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும், இதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் விடிய விடிய பாரம்பரிய வழக்கப்படி புராண நாடகங்கள் நடத்தப்படும்.
தொடர்ந்து 21-ந் தேதி காலை 10:30 மணிக்கு அம்மனின் கண் திறப்பு வைபவம் அம்மனின் கண் திறப்பு மண்டபத்தில் நடத்தப்படும். அம்மனின் கண் திறந்து பூஜைகளுக்கு பின் ஆயிரம் பொன் சப்பரத்தில் திரளான பக்தர்களின் மத்தியில் உலா வந்து கொலுமண்டபத்திற்கு எழுந்தருள்வார். அன்று நள்ளிரவு 12 மணிக்கு கொலு மண்டபத்திலிருந்து புஷ்ப விமானத்தில் உலா வந்து வானக் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருவார்.
]மறுநாள் 22-ந் தேதி நண்பகல் 1.30 மணிக்கு சொருகு பட்டை சப்பரத்தில் உலா வந்து பூஞ்சோலைக்கு அம்மன் எழுந்தருள்வார்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழுவினர்,தொழில் அதிபர் மேகநாதன், தாடிக்கொம்பு ஊர் நாட்டாமைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்
