• June 8, 2025

டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை: மாசு கட்டுப்பாட்டு குழு உத்தரவு

 டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை: மாசு கட்டுப்பாட்டு குழு உத்தரவு

தலைநகர் டெல்லி மாசு அதிகம் உள்ள நகரம் ஆகும். குளிர்காலத்தில் மாசுபாடு மிக அதிகமாக இருக்கும்.இதனால் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். மாசு கட்டுப்பாட்டு குழு உத்தரவின் படி வருகிற அக்டோபர் 31-ம் தேதி முதல் தீபாவளி , கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற இருக்கின்றன.

இதையொட்டி டெல்லியில் காற்று மாசுபாட்டைகருத்தில் கொண்டு பட்டாசுகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் விநியோகம் செய்தல் மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளை வெடித்தல் என அனைத்து வகையான செயல்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.

டெல்லியில் மாசு பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தினசரி நடவடிக்கை குறித்து காவல்துறை மின்னஞ்சல் மூலம் மாசு கட்டுப்பாட்டு குழுவிற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும்., ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *