சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பாக கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்தியா சாம்சங் தொழிலாளர் சிஐடியூ சங்கத்தை தமிழ்நாடு தொழிலாளர் துறை பதிவு செய்ய வேண்டும்; தொழிற்சங்க உரிமையைப் பறிக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாத கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு கார்பரேட் ஆதரவு கொள்கையால், தொழிலாளர்மீது அடக்குமுறையை ஏவி வருகிறது. இதனை கண்டித்தும், சிஐடியூ சங்கத்தை பதிவு செய்து, கோரிக்கைகளை பேசி தீர்வு காணவும், அடக்குமுறையைக் கைவிடவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவி ராஜ் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் விவசாயிகள் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன் செல்வராஜ் கணபதி சிஐடியு மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி ஆறுமுகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
