கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலை) முன்பாக இன்று மாலை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.,
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பலரின் வருமானவரி பிடித்தம் செய்யபப்ட்ட பணம் செலுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டதால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் திரண்டு வந்து இருந்தனர்.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 1 கோடி ரூபாய் அளவிலான இமாலய நிதி முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். நிதி முறை கேட்டில் ஈடுபட்டவர்களை புலன் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .ஆசிரியர்களிடம் பிடிக்கப்பட்ட பணத்தை மீட்டு அவர்களின் வருமானவரிக் கணக்கில் செலுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
