• June 8, 2025

கோவில்பட்டி அருகே 9 நாட்களாக போலீஸ் நிலையத்துக்கு அலைந்த பெண்; கனிமொழி எம்.பி.முயற்சியால் பிரச்சினைக்கு தீர்வு

 கோவில்பட்டி அருகே 9 நாட்களாக போலீஸ் நிலையத்துக்கு அலைந்த பெண்; கனிமொழி எம்.பி.முயற்சியால் பிரச்சினைக்கு தீர்வு

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அமலபுஷ்பம் என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தனியார் கம்பெனியில் வேலை பார்த்த அவருக்கு,வங்கி ஊழியர் கரண்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

நாலாட்டின்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து அவர்கள் கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறிவந்த கரண்குமார் திடீரென மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது, இதனால் அவர் பிரிந்து சென்று விட்டார்,

‘இதை தொடர்ந்து அம்லபுஷபம், சுப்பிரமணியபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். நாலாட்டின்புதூரில் அமலபுஷபம் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரிடம்  2 மாதத்தில் வீட்டை காலி செய்துவிடுகிறேன். எனது அட்வான்ஸ் தொகையில் வீட்டு வாடகையை கழித்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்,

ஆனால் அதற்கு முன்பாகவே வீட்டை காலி செய்யும்படி கூறிவந்த நிலையில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்து வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்து விட்டனர்,

இது பற்றி அறிந்ததும் அமலபுஷபம் நாலாட்டின்புதூர் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை, அவருக்கு ஆதரவாக ஐந்தாம் தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு திடீர் உடல்நலகுறைவு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் அனைத்து  மகளிர் போலீஸ் நிலையத்திலும் அமலபுஷபம் புகார் அளித்தார்.எந்த நடவ்டிகையும் இல்லை. 9 நாட்களாக போலீஸ் நிலையத்துக்கு அலைந்து வந்த நிலையில் கனிமொழி எம்/.பி.யை தொடர்பு கொண்ட அமலபுஷ்பம் , நடந்த விவரங்களை கூறி முறையிட்டார்,

இதை தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு பேசினார். மகளிர் போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கினார்கள். அமலபுஷ்பத்தை தொடர்பு கொண்டு பேசினர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே எடுத்து வைக்கப்பட்ட பொருட்களை வீட்டுக்குள் எடுத்து வைக்க ஏற்பாடு செய்தனர். தற்காலிகமாக அமலபுஷ்பத்தின் கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்பட்டு இருக்கிறது,

இதற்கிடையே வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் ரூ.33 ஆயிரம் காணவில்லை என்று அமலபுஷ்பம் புகார் கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *