• April 19, 2025

திருப்பதி லட்டுக்குள்  குட்கா பாக்கெட் இருந்ததாக பெண் புகார்

 திருப்பதி லட்டுக்குள்  குட்கா பாக்கெட் இருந்ததாக பெண் புகார்

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது.

இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதி லட்டுக்குள்  குட்கா பாக்கெட் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் பகுதியை சேர்ந்த பத்மா என்பவர், கடந்த 19ம் தேதி திருப்பதி கோவிலில் வாங்கிய லட்டுக்குள்  குட்கா பாக்கெட் இருந்ததாக  வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது புகாரை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க திருப்பதி தேவஸ்தான குழு கொல்லகூடேம் கிராமத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *